ஆத்ம ஞானம்

ஆத்ம ஞானம்

ஆத்ம ஞானம்

‘நீ உன்னை நன்றாக அறிந்து கொள்’. காரணம், உன்னை நீ அறியத் தவறிவிட்டாய், நீ தேடும் சுகம், நீ தேடும் வீடு, நீ தேடும் பாதுகாப்பு, நீ தேடும் ஆனந்தம் அனைத்தும் நீதான். முதலில் வெளியே தேடுவதை நிறுத்திவிட்டு உனக்குள் வா! உன் ஆன்மாவுக்குள் அறிந்து கொள். 

விலங்குகளிடம் தடை செய்யப்பட்டுக் கிடக்கிற உன் ஆன்மாவைப்பற்றிய அறிவு உன்னிடம் முழுமையாய் உள்ளது. அதில்தான் உனது பிரச்சனைகள் உள்ளன. அங்கேதான் உன் பிரச்சனைகளுக்குத் தீர்வும் இருக்கிறது. உன் தவறான அபிப்பிராயத்தை மாற்று. தன்னை உணர்ந்துகொள்.

பல கோடி மனிதர்களில் ஒருவன் நான், பிரபஞ்சத்தில் ஒரு சிறு துரும்பாகிய பூமியில் உலவும் மகா சிறு துரும்பு என்பதை மறந்துவிட்டு. ‘நான் யார் தெரியுமா?’ என்று நிரூபித்துக் காட்ட முயலுகிறாய். உன்னைப் பற்றிப் பலருக்கும் தெரியவேண்டும் என்று ஆசைப்படுகிறாய். ஆயுள், அறிவு, பொருள் முதலியவற்றால் அளவுக்குட்பட்டவன் என்று நினைத்து அவற்றைப் பெரிதாக்கிக் கொள்ள நீ ஆசைப்படுகிறாய். 

மூன்று உலகங்களையும் தோற்றுவித்து, நிலைப்படுத்தி, மறைத்து மீண்டும் வெளிப்படுத்தும் பிரம்மமாக நீ ஒருவேளை இருந்து, இந்த விஷயத்தை நீ அறியாமல் போய்விட்டால்?  ‘பிரம்மமத்தைப் பற்றி அறிந்தவன் பிரம்மமாகிறான், ‘ஆத்மாவை அறிந்தவன் சோகக் கடலை கடந்து விடுகிறான்’ என்று  மறைபொருட்கள் கூறுகின்றன. 

ஆத்ம ஞானம் மட்டுமே சுயத்தைப் பற்றிய அறிவைப் புகட்டி வழிகாட்டுகின்றது. அன்றாட வாழ்க்கையிலிருந்து உதாரணங்களையும் உவமைகளையும் பயன்படுத்தி ஞான விழிப்பின் மூலம் உண்டாகும் மோக்ஷ நிலையை ஆத்ம ஞானம் மட்டுமே கொடுக்கும். என்வே நான் யார் என்பதை அறி! 

யோகி ஸ்ரீராம் பாபா.