குருவுடன் மெளன அனுபவம்.

குருவுடன் மெளன அனுபவம்.
அகஸ்டின்.
ஒருவரும் ஞானம் கேட்பாரில்லை என்று பகவான் சாயிநாதர் அடிக்கடி கூறியதாக யோகி ஸ்ரீராம் பாபா அவர்கள் சொன்னது இன்றுவரை என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது! கடந்த 2018 ஆம் வருடம் டிசம்பர் மாதம் முதல் ஞாயிறன்று மௌனம் நடைபெறும் என்ற குருந் தகவல் மூலமாக செய்தியை படிக்கிறேன்.
விரதமே இல்லாத ஒருவனுக்கு மௌன விரதம் என்ற வார்த்தை மனதின் மௌனத்தை கலைக்கின்றது. ஆம்! அத்தகவலை படித்ததிலிருந்து அதைப் பற்றிய சிந்தனை ஓட ஆரம்பித்து. மெளனம் அறிவித்த நாளும் வந்தது நானும் என் மனைவியும் காலை 5.00 மணிக்கு புறப்பட்டு 6.00 மணிக்கு குருவின் இல்லத்தை வந்தடைந்தோம்.
பயணித்த ஒரு மணிநேரமும் மௌனத்தை பற்றியே பேசினோம். ஒவ்வொருவராக வந்துக்கொண்டே இருந்தனர் மணி 7.00 ஆனது. இருபது நபர்கள் வந்திருந்தனர். குரு பேச ஆரம்பித்தார் அமைதியாக கேட்டுக்கொண்டிருதோம். நேரம் செல்ல செல்ல என்னை கட்டி போட்டது போல் இருந்தது மனம் முன்பை விட வேகமாக பேச ஆரம்பித்தது.
உதடுகள் துடிக்கிறது இது எனக்கு ஒரு புது விதமாக தோன்றியது. குரு சில மணி நேரத்தில் ஆழ் நிலை தவத்திற்கு இட்டுச் சென்றார். மனதின் வேகம் குறைக்கப்பட்டது ஆனால் உதடு பேச வேண்டும் என்று துடித்தது மதியம் 1.00 மணி ஆனது அனைவருக்கும் மதிய உணவு பரிமாறப்பட்டது. அப்போது இருந்த அமைதியில் கடிகாரமுல் சப்தமும், உண்ணும் போது எழும் சப்தமும் என் காதுகளில் மிக தெளிவாக கேட்பதை உணமுடிந்தது.
மீண்டும் சத்சங்கமும் , தியானமும் தொடர்ந்தது அதன் முடிவில் தண்ணீர் பனிக்கட்டி ஆனது போல் உறைந்து காணப்பட்டேன். மாலை 5.00 மணி ஆனது. அனைவர் கைகளிலும் ஓர் பேப்பரும், பேனாவும் கொடுக்கப்பட்டது. அதில் உங்களுடைய ஆசைகளை வரைமுறை படுத்தி பூர்த்தி செய்யுங்கள். உங்களது விண்ணப்பங்கள் பாபாவின் பாதத்தின் வைக்கப்படும் என்று குரு கூறினார்.
அனைவரும் ஆர்வமுடன் எழுதினர். நானும் எழுதினேன். வரிசையாக நான்கு ஆசைகளை பதிவிட்டிருந்தேன். ஒவ்வொருவரின் பேப்பரும் வாங்கப்பட்டு படிக்கப்பட்டது. என் பேப்பர் படிக்கப்படுவதற்காக நான் படபடப்புடன் காத்திருந்தேன். ஆனால் என் பேப்பர் இறுதியாக வாங்கப்பட்டு படிக்கப்பட்டது.
அனைவர் எழுதியதையும் குரு படித்து பார்த்து விட்டு, ஒருவரும் ஞானம் கேட்பாரில்லை என்று கூறி பாபாவின் பாதத்தில் நாங்கள் எழுதிய விண்ணப்பங்களை சமர்ப்பித்தார். நிச்சயம் அவரவர் ஆசைகள் நிறைவேற்றப் படும் வாழ்க வளமுடன் என்ற சொல்லோடு மௌனத்தை முடித்து வைத்தார்.
அனைவரும் அவரவர் அனுபவத்தை பதிவு செய்தார்கள் என்னால் அவ்வாறு பதிவிட முடியவில்லை ஒருவரும் ஞானம் கேட்பாரில்லையே என்று குரு கூறிய அந்த எதார்த்தமான வார்த்தை என் கண்ணத்தில் ஓங்கி ஒரு அறை விட்டது போல் இருந்தது. அவ்வார்த்தை என் செவிகளை துளைத்து மூளையை தாக்கியது எதை எதையோ கேட்டோம் ஞானத்தை ஏன் கேட்கவில்லை என்ற கேள்வி அப்போது தான் எனக்குள் எழுந்தது.
கடைவிரித்தேன் கொள்வாரில்லை வாரிக்கொண்டேன் என்று வள்ளலார் கூறியதும். என்னிடம் வரும்போது பாத்திரத்தை நேராக தான் பிடிக்கிறார்கள் என்னருகே வரும்போது தலைகீழாக மாற்றி பிடித்து விடுகிறார்கள் என்று பகவான் சாய்பாபா கூறியதையும் ஒத்து பார்க்கின்றேன் எந்த நிலையில் இருந்து குரு சொல்லியிருப்பார்?
மௌனித்து பார் தெரியும் என்பார்கள் மௌனத்துடன் தியானித்து பார் உணர முடியும் என்பார் குரு. அப்பேருணர்வாகிய மெளனம் யோகி ஶ்ரீராம் பாபா அவர்களால் சாய் தியானாலயா ஆத்ம ஞான பீடத்தில் பயிற்று விக்கப்படுகிறது. கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமாய் ஆவலுடன் அழைக்கின்றேன்.
குரு வாழ்க! குருவே துணை!
*******